Apr 28, 2014

Gnabagam Poo Malai Thoovum

மலர் கலெக்டராக பதவியேற்று தன தந்தை பரமேஸ்வரன் மற்றும் தாய் அங்கையர்கன்னியுடன் அந்த ஊருக்கு வருகிறாள். அவ்வூர் மக்கள் அனைவராலும் விரும்பப்படுகின்ற கதிரை சந்திக்கிறாள்.

கதிரின் தம்பி அன்பு அவர்களது மனேஜர் சபாபதியின் மகள் ரேவதியை விரும்புகிறான். கதிரும் மலரை விரும்புவதாக தன் தாயிடம் கூறி குடும்பத்துடன் மலரின் வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறான்.

மலர் இதனை ஒப்புக் கொண்டாளா? அவளின் பின்னணி என்ன? என்பதை ஆசிரியர் சுவாரசியமாக கூறியுள்ளார். இக்கதையில் முத்தழகு எனும் திருநங்கை பாத்திரம் கதிரின் கசினாக வருகிறது. இப்பாத்திரத்தின் மூலம் திருநங்கைகளை சமுதாயம் எவ்வாறு பார்க்கிறது என்பதை பற்றியும் கதைப் போக்கில் விவரிக்கிறார்.

No comments: