Apr 30, 2014

Kanne Unthan Nizhalaaven

வர்த்தினி ஒரு தவறான புரிதலின் காரணமாக தன் தாய் சுகந்தி மற்றும் தன்னை வளர்த்த மாமா Dr.சுந்தர மகாலிங்கதின் மீதும் வெறுப்பு கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தோழி மீராவின் தந்தை சபாபதியின் உதவியால் ஆத்தூரில் தென்னவனின்  வீட்டில் மேர்பார்வையாளராகவும் அவனது கோமாவிலிருக்கும தாயை பராமரிக்கும் பொறுப்பை ஏற்கிறாள்.

வீட்டிலும் வர்த்தினி சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வருகிறாள்.  அவளது முயற்சியால் தென்னவனின் தாயின் உடல்நிலை முன்னேற்றம்
  அடைகிறது. அவளை மணக்க விரும்புவதாக தன்னவன் அவளிடம் கூறுகிறான். அதனை ஏற்க மறுத்து ஊருக்கு செல்ல நினைக்கிறாள்.

வர்த்தினியை ஏமாற்றி தனது பண்ணை வீட்டில் அவளை சிறை வைக்கிறான். அதனால் அவன் மீது வெறுப்பை வளர்க்கிறாள் வர்த்தினி. ஒரு கட்டத்தில் அவளது நிராகரிப்பை உணர்ந்த தென்னவன் அவளுக்கு விடுதலை அளிக்கிறான். அவனது ஒதுக்கத்தில் தன் காதலை உணர்கிறாள் வர்த்தினி.

தன்  தாய் மற்றும் மாமாவின் மீது எந்த தவறும் இல்லை என்பதையும் அவர்களது ஏற்பாட்டின் படியே தான் தென்னவன் வீட்டிற்கு சென்றதையும் அறிந்து கொள்கிறாள். இறுதியில் வர்த்தினி தென்னவன் இருவரும் ஒன்று சேர்கிறார்கள். 

No comments: