Apr 25, 2014

Unakena Thavamirunthen

நித்திலா தாரா இருவரும் கல்லூரி தோழிகள். தாராவிற்கு அவளது முறைப் பையனை திருமணம் செய்ய வீட்டில் ஏற்பாடு செய்கிறார்கள். வேறு ஒருவனை விரும்பும் தாரா திருமணத்திற்கு முதல் நாள் வீட்டிற்கு தெரியாமல் தன் காதலை திருமணம் செய்து கொள்கிறாள்.

தாராவிற்கு நிச்சயம் செய்த நரேந்திரனின் குடும்பமும் நித்திலாவின் குடும்பமும் நண்பர்கள். இரு குடும்பமும் நித்திலவிற்கும் நரேனுக்கும்  திருமணம் செய்து வைக்கிறார்கள். சிறு வயதிலேயே நரேனை மனதார விரும்பியதால் நித்திலா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். தாராவின் துரோகத்தால் வெறுப்படைந்த நரேன், நிதிலாவிடம் இருவரும் நண்பர்களா கவே இருக்கலாம் என்கிறான்.

கொஞ்ச நாட்களில் நித்திலாவின் செயல்களால் ஈர்க்கப்பட்ட நரேனும் அவளை விரும்பத் தொடங்குகிறான். நரேனின் தங்கை விந்தியாவின் வாழ்வில் அவளது காதலன் கிஷோர் வடிவில்  ஒரு புயல் வீசுகிறது. இதனால் நரேன் நித்திலாவின் வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது. விந்தியாவின் நிலை என்ன ? நித்திலா நரேன் இருவரும் அவர்களுக்கிடையில் இருந்த நேசத்தினை உணர்ந்து கொண்டார்களா என்பதை நாவலை  அறிந்து கொள்ளுங்கள்.

No comments: