May 2, 2014

Ullam Un Vasamaanathadi

மிருணாவின் அக்கா மீனாவிற்கு பிறந்த பெண் குழந்தை இறந்து விடுகிறது. மிருணா, தன் அக்கா கணவன் தங்க வேலு அவ்வூரில் உள்ள ஒரு மன நலம் சரியில்லாத பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வதை கண்டு அதிர்ச்சி அடைகிறாள்.மிருணாவை பார்த்து காதல் வயப்பட்ட முகிலன்  தன் பெற்றோரிடம் சொல்லி முறைப்படி அவளை மணக்கிறான்.

முகிலனின் முரட்டு தோற்றத்தை கண்டு அவனிடம் இயல்பாக பழக தயங்குகிறாள். அவளின் மாமியார், பணக்கார இடத்திலிருந்து பெண் வரவில்லையே என்ற வருத்தத்தில் மிருணாவிடம் அதிருப்தி அடைகிறாள்.
மிருணா மேற்படிப்பு படிக்க முகிலன் உதவுகிறான்.

அந்த பைத்தியக்காரப் பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் தங்க வேலு என்பதை அறிந்த முகிலன் அவனை எச்சரித்து விட்டு அப்பெண்ணை ஒரு கருணை இல்லத்தில் சேர்க்கிறான். பிரசவத்திற்குப் பின் அப்பெண் இறந்து விடுகிறாள். மீனா அக்குழந்தையை தன குழந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறாள்.  

தனக்காகவும், தன்  குடும்பத்திற்காகவும் கவனம் எடுத்துக் கொள்ளும் முகிலனின் உண்மையான அன்பை மிருணா புரிந்து கொண்டாளா என்பதே மீதி கதை.



No comments: