Jul 29, 2008

மன்னிக்க மாட்டாயா? ஆர்.மணிமாலா

நாயகி நந்தினி பெற்றவர்களை எதிர்த்து தான் காதலித்த சந்துருவை கைபிடிக்கிறாள். விளைவு அந்த அதிர்ச்சியில் அவளது தந்தை இறந்து விடுகிறார்.
இது தெரியாத நந்தினி திருமண வாழ்கையின் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறாள்.
விதியின் வலியால் இரண்டு ஆண்டுகளில் சந்துரு விபத்தில் இறந்து விடுகிறான்.அந்த அதிர்ச்சியில் அவளது கருவும் கலைந்து விடுகிறது. கணவனின் கடைசி ஆசையாக நந்தினி தனது மங்கலத்தை துறக்காமல் இருக்கிறாள்.
தன் அப்பா இறந்தது தெரிந்து துயருருகிறாள். அவளை குடும்பமே வெறுத்து ஒதுக்குகிறது. அம்மாவின் அன்புக்கு ஏங்குகிறாள். அவளை பற்றி தெரியாமல் அவளது குடும்பமும் ஊராரும் தவறாக நினைக்கிறார்கள். உறவினரின் வீட்டில் வாடகைக்கு தங்கி வேலைக்கு செல்கிறாள்.
இறுதியில் அவளுக்கு இதய நோய் ஏற்படுகிறது. நந்தினியின் மரண விளிம்பில் அவளது தாய்க்கு உண்மை தெரிந்து மகளை காண வருகிறாள். தாயின் மடியிலேயே அவளது உயிர் பிரிகிறது.



No comments: