Sep 25, 2008

கனவு கரையும் நேரம்

தேவா மற்றும் பிரதீபா இருவரும் ஒருவரையொருவர் ஏழு மாதங்களாக விரும்புகின்றனர். பிரதீபா பெரிய தொழிலதிபரின் மகள். தேவா தங்களது காதலைப் பற்றியும் பிரதீபாவை அவளது தந்தையிடம் பேசுமாறு கூறுகிறான்.
சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சியின் தலைவி அனாமிகாவை தாமஸ் என்பவன் சந்தித்து கங்காதர் தன் மகள் பிரதீபா விரும்பும் தேவாவின் நடவடிக்கைகளைப் பற்றி ரகசியமாக கண்காணிக்க தங்களது நிறுவனத்தி அணுகுமாறு கூறியதாக தெரிவித்தான்.
அனாமிகாவும் அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தாள். அதன்படி தேவா நேர்மையானவன் என்பது தெரிய வருகிறது. தாமஸ் தேவாவை அவன் பேஸ்கட் பால் விளையாடும் மைதானத்தில் வைத்து கொலை செய்து விடுகிறான். இன்ஸ்பெக்டர் தயாளன் விசாரித்ததன் பேரில் தாமஸ் தான் கொலை செய்தான் என்பது தெரிய வருகிறது. கங்காதரின் பழைய பார்ட்னர் விஸ்வநாத மூர்த்தியின் பேரில் சந்தேகம் வருகிறது.
இறுதில் கங்காதர் தான் தாமஸ் மூலமாக தேவாவை கொலை செய்ய சொன்னது தெரிய வருகிறது.

No comments: