ப்ரியா என்னை பிரியாதே

Written by Selvi on 3:05 PM

தொழிலதிபர் சோம்நாத்தின் மகள் ப்ரியா கோவிலுக்கு தனியே செல்லுகிறாள். இனி அவ்வாறு செல்ல அனுமதிக்க வேண்டாமென்று ஆஸ்தான சோதிடர் பார்கவா சோம்நாத்திற்கு எச்சரிக்கிறார். ப்ரியா கோவிலில் தன்னுடைய நட்சத்திரத்தைக் கொண்ட சரவணனை சந்திக்கிறாள்.

சரவணனும் அவனது அத்தை மகள் கௌசல்யாவும் விரும்புகின்றனர். ஆனால் இவர்களுக்கு திருமணம் நடக்காது என அவனது மாமா மரகதலிங்கம் கூறுகிறார். சோம்நாத்தின் கம்பெனியில் வேலைக்கு செல்கிறான். அங்கு நடக்கும் தில்லு முல்லுகளைக் கண்டு வெறுக்கிறான். வேலுப் பிள்ளை தனது பிஸ்னசில்ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட ப்ரியாவை தனது மகன் பிரகாஷுக்கு திருமணம் செய்ய நினைக்கிறான். அதன்படி ப்ரியாவின் ஜாதகத்திற்குப் பொருந்துகிற மாதிரி ஒரு போலி ஜாதகத்தை தன் மகனுக்கு உருவாக்குகிறார்.

ப்ரியாவும் பிரகாஷும் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சரவணன் அவர்களது அலுவலகத்தில் நடக்கும் அநியாயங்களை கூறுகிறான். பிரகாஷ் சரவணன் மீது திருட்டுப் பலியை சுமத்தி போலீசில் மாட்ட வைக்கிறான். இதனால் கௌசல்யா அவனை விட்டு விலகுகிறாள். ஆத்திரம் கொண்ட சரவணன் ப்ரியாவின் நிச்சயதார்த்த விழாவுக்கு செல்கிறான்.

வேலுப் பிள்ளை மற்றும் பிரகாஷின் சுய ரூபம் ப்ரியாவுக்கு தெரிய வருகிறது. விழாவில் ப்ரியாவை பழி வாங்க எண்ணி அவளை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறான். இறுதியில் ப்ரியாவும் சரவணனும் ஒன்று சேர்கிறார்கள்.

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 comments: Responses to “ ப்ரியா என்னை பிரியாதே ”

Affliate sites/Links: Free Wallpapers, Tamil Novels Review, Chennai-Tourism, Addbus.com, dmegs.com, linksmarket.net, webtechvision, internetgecko, Million Product Store Hub Pages, free4u, google sites, searchsight, Google Directory, link-backnet, tagfetcher, searchsight, top-of-blogs, technorati, dmoz.org