Mar 5, 2012

அவள் வரமாட்டாள்

டாக்டர் சசிதரனின் முறைப்பெண் லாயர் நந்தினி. நந்தினி தன் அத்தானின் மீது உயிரையே வைத்திருந்தாள். சசிதரனுக்கு அவள் மேல் பெரிதாக அபிப்ராயம் இல்லாததால் எம்.டி முடித்த பிறகே திருமணம் என தட்டிக்கழித்தான்.

சசிதரனும் அனிதாவும் ஒருவரையொருவர் விரும்பினர். திருமணம் செய்யும் எண்ணத்தில் எல்லை மீறினான். அனிதா அதனை வீடியோ எடுத்து சசிதரனை பணம் கேட்டு மிரட்டினாள். ஆத்திரத்தில் சசிதரன் அனிதாவை சுட்டுக் கொன்று விடுகிறான். சம்பத்தை நேரில் பார்த்த நந்தினி திருட்டுக்காக கொலை நடந்தது போல் செட்டப் செய்து தன் வாதத்திறமையால் சசிதரனை காப்பாற்றுகிறாள்.

சசிதரனுக்கு நிரபராதி என கோர்ட் தீர்ப்பளித்தாலும் அவனை ஏற்க மறுக்கிறாள்.

No comments: